ராகுலன் (பிறப்பு: கி மு: 534) சித்தார்த்த கவுதமருக்கும் - யசோதரைக்கும் பிறந்த ஒரே மகன். ராகுலன் பிறந்த நாளன்றே கௌதமர் அரண்மனையை விட்டு வெளியேறி விட்டார். பின்னர் ராகுலனை அவனது தாய் யசோதரையும் தாத்தா சுத்தோதனரும் வளர்த்தனர். ராகுலன் வளர்ந்த பின்னர் புத்தரின் முக்கிய பத்து சீடர்களில் ஒருவனாக விளங்கினார். ராகுலனுக்கு குருவாக பாடம் கற்றுக் கொடுத்தவர் இருந்தவர் மௌத்கல்யாயனர் ஆவார்.